இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது பல இருதரப்பு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக பிரதமர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இலங்கை மருத்துவ மாணவர்களை சீனாவுக்குத் திரும்பச் செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தியதாக பிரதமர் கூறினார்.
சுற்றுலா, முதலீடுகள், கோவிட்-19 நிவாரணம் மற்றும் கோவிட்-க்கு பிந்தைய தயார்நிலை உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக பிரதமர் ராஜபக்ஷ கூறினார்.
இலங்கைக்கு சீன அரசாங்கம் தொடர்ந்தும் வழங்கி வரும் ஆதரவிற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
எதிர்வரும் காலங்களில் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு மேலும் மேலும் வலுவடையும் என நம்புவதாக பிரதமர் தெரிவித்தார்.



