இலஞ்சம் வாங்கிய பாடசாலை அதிபருக்கு விளக்கமறியல்!

Date:

மாணவர் ஒருவரை தரம் 7 இல் இணைத்துக் கொள்வதற்கு 200,000 ரூபா இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் கைதான கம்பஹா தக்ஷிலா மத்திய கல்லூரியின் அதிபரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய இன்று (24) உத்தரவிட்டுள்ளார்.

கம்பஹா பெம்முல்ல பகுதியைச் சேர்ந்தவரும் கம்பஹா தக்ஷிலா மத்திய கல்லூரியின் அதிபருமான கல்யாணப்பிரிய சமரதுங்க (50) என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த குமாரசிங்க கௌசல்யா இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.

சர்வதேச பாடசாலையொன்றில் ஆங்கில வழியில் கல்வி பயிலும் தனது பிள்ளை, பாடசாலையின் 7ஆம் வகுப்புக்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அவரை பாடசாலையில் இணைப்பதென்றால் அதிபர் 200,000 ரூபா இலஞ்சம் கோருவதாக புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

முறைப்பாட்டாளர் ஆணைக்குழுவில் செய்த முறைப்பாட்டையடுத்து, இரகசியப் புலனாய்வாளர் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பாடசாலை அதிபர் அலுவலகத்தில் வைத்து இலஞ்சம் பெற்ற போது அதிபர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

சந்தேகநபரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்ததுடன், வழக்கை அன்றைய தினம் வரை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

16 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தல்: 21 வயது குடும்பஸ்தரும் நண்பரும் மடக்கிப் பிடிப்பு!

மட்டக்களப்பு நகரில் உறவினர் வீட்டுக்கு சென்ற 16 வயது சிறுமி ஒருவரை...

ரசிக வெறியால் வந்த வினை: தமிழக தேர்தலில் கள்ள வாக்கிட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் கைது!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்று முடிந்துள்​ளது. எப்​போதும் இல்​லாத வகை​யில் இந்​த​முறை...

யாழில் மின்னல் தாக்கி இளைஞன் பலி

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் நேற்று (14) மின்னல் தாக்கி இளைஞர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்