ஜனவரி முதலாம் திகதி முதல் பொது இடங்களுக்குச் செல்வதற்கு தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கோவிட் தடுப்புக் குழுவினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்ட கோவிட் குழு கூட்டத்தின் போது பேசிய அமைச்சர், இந்த ஒழுங்குமுறை ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்றார்.
COVID-19 க்கு எதிரான தடுப்பூசி வழங்கப்படும் போதெல்லாம் அதைப் பெறுவது குடிமக்களின் பொறுப்பு என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறினார்.
தனிநபர் ஒருவரின் தடுப்பூசி நிலையை கண்டறிய QR குறியீடு முறையை பயன்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ரணதுங்க தெரிவித்தார்.
கம்பஹாவில் 1,554,292 பேருக்கு COVID-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் மாவட்டத்தில் பூஸ்டர் தடுப்பூசிகளை டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் முடிக்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இலங்கையில் 15,964,289 நபர்கள் COVID-19 க்கு எதிராக குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 13,803,820 நபர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர்.




