யப்னா கிங்ஸ் முதல் வெற்றி!

Date:

இன்று மாலை நடைபெற்ற 2021 லங்கா பிரீமியர் லீக் தொடரின் நான்காவது போட்டியில் தம்புள்ளை ஜெயண்ட்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, யப்னா கிங்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.

போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை ஜெயன்ட் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 110 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அந்த அணி 19 ஓவரில் 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தம்புள்ளை அணியில் அதிகபட்சமாக நுவனிது பெர்னாண்டோ 23 ஓட்டங்களையும், சமிக்க கருணாரத்ன 18 ஓட்டங்களையும் ரமேஷ் மெண்டிஸ் 14 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க மற்றும் மஹீஸ் தீக்ஷன ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி 12.3 ஓவர்கள் நிறைவில் இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 113 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது.

இதில் அவிஷ்க பெர்ணான்டோ 33 ஓட்டங்களையும், டொம் கோலர் ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். சொய்ப் மலிக் ஆட்டமிழக்காமல் 26 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

3 விக்கெட்டுகளை வீழ்த்திய தீக்ஷன ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

spot_imgspot_img

More like this
Related

பலே திருடனை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிசார்

ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களைக் குறிவைத்து தொடர்ச்சியான மோசடி மற்றும் திருட்டு...

மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு

எல் நினோ காலநிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை...

முல்லைத்தீவு இ.போ.ச சாலைக்குள் நடந்த அகோர சம்பவம்!

இலங்கை போக்குவரத்துசபையின் முல்லைத்தீவுச்சாலை உதவி முகாமையாளரான பிரதீஸ்குமார் என்பவர், கடமை நேரத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்