அடுத்தாண்டு ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து வாரத்தில் நான்கரை நாட்கள் மட்டுமே வேலை நேரம் இருக்கும் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்திருக்கிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளான ரஸ் அல் கைமா, அபுதாபி, சார்ஜா, டுபாய், அஜ்மன், உம்-அல்-குவைன் மற்றும் புஜைராவில் வருகிற 2022, ஜனவரி 1ஆம் திகதி முதல் புதிய பணி நேரம் அறிமுகமாக இருக்கிறது.
அதன்படி, திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 7.30 முதல் மாலை 3.30 வரை 8 மணி நேர பணியும் , வெள்ளிக்கிழமை காலை 7.30 முதல் மதியம் 12 வரை 4.30 மணி நேர பணியும் நடைமுறைக்கு வருகிறது. வெள்ளி மதியம் 1.15 மணிக்கு தொழுகை முடிந்ததிலிருந்து சனி, ஞாயிறு உள்பட இரண்டரை நாட்கள் விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வெள்ளிக்கிழமைகளில், ஊழியர்கள் நெகிழ்வான வேலை அல்லது வீட்டிலிருந்து வேலை செய்யும் விருப்பங்களைத் தேர்வுசெய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் குடும்பத்தை கவனிக்கவும் இந்த புதிய பணி திட்டம் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் பணிபுரியும் ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.
தற்போது, அரபு நாடுகளில் வெள்ளிக்கிழமை மட்டுமே விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நடவடிக்கையின் மூலம், உலகளாவில் உள்ள வாரத்தில் ஐந்து வேலை நாள் நடைமுறையை விட, குறைவான தேசிய வேலை வாரத்தை அறிமுகப்படுத்திய உலகின் முதல் நாடாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மாறியுள்ளது.



