வடமராட்சி கிழக்கு பூனைத் தொடுவாய் கடற்கரையில் இன்று மாலை உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
கடந்த மாதம் நவம்பர் 27ஆம் திகதிக்கு பின்னர் யாழ்ப்பாண குடாநாட்டு கரையோரங்களில் ஒதுங்கிய 6வது சடலம் இது.
நவம்பர் 27ஆம் திகதி வடமராட்சி கிழக்கு மணல்காட்டிலும், வல்வெட்டித்துறை பகுதியில் சடலங்கள் கரைஒதுங்கியிருந்தன. 29ஆம் திகதி ஊர்காவற்துறையிலும், 30ஆம் திகதி வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் சடலங்கள் கரை ஒதுங்கியிருந்தன,
இந்நிலையில் இன்றைய தினம் வடமராட்சி சக்கோட்டைப்பகுதியில் பிற்பகல் 2:30 மணியளவில் உருக்குலைந்த நிலையில் சடலம் கரை ஒதுங்கியிருந்தது.
இந்நிலையில் இன்று மாலை வடமராட்சி கிழக்கு பூனைத் தொடுவாயிலும் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 6 நாட்களில் குடாநாட்டு கரையோரங்களில் 6 சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.



