25.4 C
Jaffna
February 7, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

கிளிநொச்சி நீதிமன்றத்தில் மாவீரர்நாள் தடைக்கு எதிரான மனு இன்று விசாரணை!

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 8 பொலிஸ் நிலையங்களால் பெறப்பட்ட மாவீரர்நாள் தடைக்கு எதிரான நீதிமன்ற கட்டளையை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று (26) காலை இடம்பெறவுள்ளது.

இந்த வழக்கில் முன்னிலையாகி பதிலளிக்குமாறு 8 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளிற்கு மன்று கட்டளையிட்டுள்ளது.

கிளிநொச்சி, தர்மபுரம், பளை, பூநகரி, ஜெயபுரம், முழங்காவில், அக்கராயன் உள்ளிட்ட 8 பொலிஸ் நிலையங்களினால், 51 பேருக்கு எதிராக, மாவீரர்நாள் அனுட்டிப்பு தடைகோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கடந்த 19ஆம் திகதி கிளிநொச்சி நீதிமன்ற நீதிபதி லெனின்குமார், 51 பேருக்கும் தடையுத்தரவு பிறப்பித்தார்.

தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சி.சிறிதரன், செ.கஜேந்திரன், முன்னாள் எம்.பி எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் வடமாகாணசபை அமைச்சர் குருகுலராஜா, கரைச்சி தவிசாளர் வேழமாலிகிதன் உள்ளிட்டவர்களிற்கே தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த தடையுத்தரவிற்கு எதிராக நேற்று (25) மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் விசாரணை இன்று இடம்பெறும்.

மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையில் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் குழு சமர்ப்பணங்களை வழங்கும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘மாவையை நீதிமன்றத்தில் நிறுத்திய போது…’: பழைய நினைவுகளை மீட்ட விக்னேஸ்வரன்!

Pagetamil

தீயில் சங்கமித்தார் மாவை!

Pagetamil

மாவை காலமானார்!

Pagetamil

அர்ச்சுனா எம்.பி கைது!

Pagetamil

மூளையில் அதிக இரத்தக்கசிவு… கோமா நிலை… தொடர்ந்து செயற்கைச் சுவாசம்; மிகமிக ஆபத்தான கட்டத்தில் மாவை: நள்ளிரவில் மாவை வீட்டில் நடந்தது என்ன?

Pagetamil

Leave a Comment