இப்போதைக்கு மாகாணசபை தேர்தலை நடத்த முடியாது!

Date:

புதிய தேர்தல் சட்டம் அமுல்படுத்தப்படும் வரை மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என அவைத் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே தேர்தல் மறுசீரமைப்புக்கான தெரிவுக்குழுவின் தலைவரும் அமைச்சருமான குணவர்தன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

“மாகாண சபைத் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கு நாங்கள் ஆதரவளிக்கத் தயாராக உள்ளோம் என்று நாங்கள் ஏற்கனவே அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளோம், ஆனால் அரசாங்கம் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை,” என்று ரஞ்சித் மத்தும பண்டார கூறினார்.

“மாகாண சபைத் தேர்தல் கட்டளைச் சட்டம் திருத்தப்படும் வரை மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே மாகாண சபைத் தேர்தலை அவசரமாக நடத்த முடியாது” என்றார்.

மாகாண சபைத் தேர்தல் கட்டளைச் சட்டத்தை குழப்பியது உங்கள் அரசாங்கமே என அமைச்சர் குணவர்தன தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

40 ஆண்டுகளின் பின் ஈரானுக்குள் அமைதியாக நடக்கும் அதிகார மாற்றம்: மதகுருமாரை பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தும் இராணுவம்!

த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விரிவான அறிக்கையின்படி, ஈரானின் முடிவெடுக்கும்...

அம்பியூலன்ஸ் மெதுவாக சென்றதால் பொலிஸ்காரர் உயிரிழப்பா?: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்...

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்