24.5 C
Jaffna
February 3, 2025
Pagetamil
இந்தியா

சூர்யாவை மன்னிப்பு கேட்க வலியுறுத்தி கிராமமக்கள் போராட்டம்!

ஜெய் பீம் படத்தின் உண்மையான கதைக்களம் அமைய பெற்றுள்ள முதனை கிராம மக்கள் நடிகர் சூர்யாவுக்கு முக்கிய கோரிக்கை வைத்துள்ளனர். அந்த கோரிக்கையை சூர்யா ஏற்காவிட்டால் அவருக்கு எதிராக தொடர்ந்து போராட போவதாக எச்சரித்துள்ளனர்.

ஜெய்பீம் என்கின்ற திரைப்படம், விருத்தாசலம் அடுத்த முதனை கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூர்யா சாதிய வன்முறையை தூண்டும் வகையில் படத்தில் காட்சிகளை அமைத்து உள்ளதாக, கிராம மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜெய் பீம் வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதால் உடனடியாக நடிகர் சூர்யா மற்றும் ஜெய்பீம் திரைப்படம் இயக்குனர் ஞானவேல் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முதனை கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி கிராமத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முதனை கிராமத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“மக்களுக்கான அரசியலை முன்வைத்து…” – தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா பதிவு

Pagetamil

மது போதையில் மதகுரு

east tamil

​​காதலியை கொன்று உடலை பதப்படுத்தி வைத்த மருத்துவர்: 3 மாதங்களுக்கு பின்னர் சிக்கியது எப்படி?

Pagetamil

கமலின் மநீம-வில் இருந்து விலகியது ஏன்? – நடிகை வினோதினி விளக்கம்

Pagetamil

இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் கோரி வழக்கு: நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Pagetamil

Leave a Comment