வடக்கு-கிழக்கு ஆயர் மன்றத்தினரின் தீர்மானத்தின்படி மூன்றாவது சனிக்கிழமையாகிய இன்று(20) போரில் இறந்த கிறிஸ்தவர்களிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
குருநகர் தூய காணிக்கை அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை அருட்பணி அ.ஜொ.யாவிஸ் அடிகளார் தலைமையில் தீபம் ஏற்றி சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
ஆயர் மன்றத்தின் அறிக்கை சர்ச்சையாகியதையடுத்து, கிறிஸ்தவர்களிடமே அந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.





