கறுவாத்தோட்டம், பழைய பந்தய மைதானத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் தீ பரவியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
வாயு கசிவு காரணமாக வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், இந்த விபத்தில் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை எனவும் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
ரீட் மாவத்தையில் அமைந்துள்ள கட்டிடமொன்றில் இன்று காலை வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சர்வதேச கேட்டரிங் நிறுவனத்துக்குச் சொந்தமான ஹோட்டல் ஒன்றின் தரைத்தளத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாமென கருதப்படுகிறது.





