தொலைக்காட்சி அலைவரிசை விநியோக நிறுவனமான சித்திரம் ரிவிக்கு, அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஃபெடரல் நீதிமன்றம் தண்டம் விதித்துள்ளது.
தொலைக்காட்சி அலைவரிசைகளை இணையவழி விநியோகிக்கும் சித்திரம் ரிவி நிறுவனம், காப்புரிமை சட்டங்களை மீறிய குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு, 31 மில்லியன் டொலர்கள் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
தெற்காசியாவின் பிரபலமான தொலைக்காட்சி அலைவரிசைகள் உள்ளிட்ட 207 அலைவரிசைகள், சித்திரம் IPTV சேவை மூலம் விநியோகிக்கப்பட்டு வந்தது. பதிப்புரிமை பெற்ற தொலைக்காட்சி அலைவரிசைகளை சித்திரம் ரிவி விநியோகஸ்தர்கள் வேண்டுமென்றே மீறியதாக கண்டறியப்பட்டதை தொடர்ந்து, இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதாக திருட்டுக்கு எதிரான சர்வதேச ஒலிபரப்புக் கூட்டமைப்பு (IBCAP) அறிவித்துள்ளது.
பதிப்புரிமை பெற்ற ஒரு அலைவரிசைகளை சட்டவிரோதமாக ஒளிபரப்பிய குற்றச்சாட்டில், 31,050,000 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மறுவிற்பனையாளர்களும் சித்திரம் ரிவி சேவை தொடர்பான செட்-டப் பொக்ஸ்களை விநியோகிக்கவோ, விற்கவோ அல்லது விளம்பரப்படுத்தவோ தடை விதிக்கிறது.
சித்திரம் ரிவிக்கு எதிரான வழக்கு, IBCAP ஆல் ஒருங்கிணைக்கப்பட்டு, அதன் உறுப்பினர் நிறுவனமான DISH Network ஆல் மார்ச் 2021 இல் தாக்கல் செய்யப்பட்டது.
ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்கள், சித்திரம் ரிவி செட்-டப் பொக்ஸ்களை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.




