29.3 C
Jaffna
March 29, 2024
உலகம்

73ஆண்டுகள் தாமதமாக நூலகத்தில் திருப்பி ஒப்படைக்கப்பட்ட புத்தகம்!

பிரிட்டனில் ஒருவர் நூலகத்திலிருந்து இரவல் வாங்கிய புத்தகத்தை 73 ஆண்டுகள் கழித்து நூலகத்திடமே திருப்பிக் கொடுத்துள்ளார்.

ரூபர்ட் ஹியூஸ் எழுதிய Stately Timber என்ற அந்தப் புத்தகம், பிரித்தானியாவின் அப்போட் ஸ்ட்ரீட்டில் இருந்த டன்ஃபெர்ம்லைன் பொது நூலகத்தில், 1948ஆம் ஆண்டு இரவல் வாங்கப்பட்டது. 14 நாட்களிற்குள் புத்தகம் திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டும். அதன்படி 1948, நவம்பர் 6ஆம் திகதிக்குள் புத்தகம் மீள ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், 73 வருடங்களின் பின்னர் புத்தகம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதை வாங்கியவர் உயிரிழந்து விட்டார். புத்தகத்தை கண்டெடுத்த மகள், அதை அஞ்சல் வழியாக, நூலகத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளார்.

கடந்த வாரம் நூலகத்திற்கு அந்த நூல் திரும்பி வந்தது. அதை பெற்ற போது ஆச்சரியமடைந்ததாக, நூல் நிலைய ஊழியர் தெரிவித்தார்.

 

புத்தகத்தை அனுப்பியவர் ஒரு  குறிப்பையும் இணைத்திருந்தார்.

மறைந்த தமது தந்தை, புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்க மறந்துவிட்டாரா அல்லது அதை வைத்துக்கொள்ள ஆசைப்பட்டாரா என்பது தெரியவில்லை என்று அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

புத்தகத்தை தாமதமாக ஒப்படைத்தால் தண்டம் செலுத்த வேண்டும். இந்த சம்பவத்தில் எவ்வளவு தண்டம் செலுத்த வேண்டுமென நூலக ஊழியர்கள் வேடிக்கையாக கணக்கிட்டு பார்த்ததில், 2,847 பவுண்ஸ் கணக்கிடப்பட்டதாக குறிப்பிட்டனர்.

எனினும், இந்த சம்பவத்தை விட, மிகவும் தாமதமாக புத்தகம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஏற்கனவே பதிவாகியுள்ளது.

கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தின் நூலகத்தில் இரவல் வாங்கப்பட்ட புத்தகமொன்று, 288 ஆண்டுகள் கழித்து ஒப்படைக்கப்பட்டது. 1668 இல் இரவல் வாங்கப்பட்ட புத்தகம் அது.

மிக தாமதமாக ஒப்படைக்கப்பட்ட புத்தகம் என்ற கின்னஸ் பட்டியலில் இந்த சம்பவமே பதிவாகியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விபத்து: நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இருட்டு அறை… போதைப்பொருள்… சொர்க்க பிரச்சாரம்: ஐஸ் தலைவரின் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த இளம் பெண்களின் தகவல்கள்!

Pagetamil

Leave a Comment