கஞ்சா நமக்கு கடவுள் தந்த வரம்; பயிரிட்டு கடன் முழுவதையும் அடைப்போம்: நாடாளுமன்றத்தில் யோசனை தெரிவித்த பெண் எம்.பி!

Date:

கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டப்பூர்வமாக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே இன்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது பேசிய பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே, கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டப்பூர்வமாக்குவது அந்நிய செலாவணி நெருக்கடிக்கு தீர்வுகளை கொண்டு வருவதோடு பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் என்றார்.

சீனா மற்றும் கென்யா போன்ற பிற நாடுகள் தேயிலை பயிரிட ஆரம்பித்து சந்தைப் பங்கின் பெரும்பகுதியை எடுத்துக்கொண்டதால் இனி தேயிலையை வணிகப் பயிரிட முடியாது.

கஞ்சாவை இலங்கையில் வர்த்தகப் பயிர்ச்செய்கையாகக் கருதலாம். அந்நியச் செலாவணியைப் பெறுவதற்கு முக்கிய ஏற்றுமதிப் பயிராகப் பயன்படுத்தப்படலாம். மற்ற நாடுகள் அதை ஏற்றுமதி செய்வதன் மூலம் பெரும் வருமானத்தைப் பெறுகின்றன என்றார்.

“இலங்கைக்கு தேயிலை இனி நீண்டகால வணிகப் பயிர்ச்செய்கையாக இருக்காது. இயற்கையாலும், கடவுளாலும் கஞ்சா செடி நமக்குக் கிடைத்த வரம். அரசின் அனுசரணையுடன் கஞ்சா வர்த்தகரீதியாக பயிரிடப்பட வேண்டும். இரண்டு அல்லது மூன்று வருடங்களில் கடனை அடைக்க அந்நியச் செலாவணியை சம்பாதிக்கலாம். சர்வதேச நாணயநிதியம் அல்லது வேறு எந்த நாட்டிலும் நாங்கள் பணத்தை பிச்சை எடுக்க வேண்டியதில்லை, ”என்று அவர் மேலும் கூறினார்.

கஞ்சா தொடர்பாக 1800களில் பிரித்தானியரால் கொண்டுவரப்பட்ட கட்டளைச்சட்டத்தை அரசாங்கம் இரத்துச் செய்ய வேண்டும் என்றும் இலங்கையில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கும் சட்டங்களை இயற்றுமாறு நீதியமைச்சரிடம் வலியுறுத்தினார்.

ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் (EIB) கணிப்புகளின்படி, அடுத்த தசாப்தத்தில் உலகளாவிய கஞ்சா சந்தைப் பங்கு 1000% அதிகரிக்கும் என்றும், 2027 ஆம் ஆண்டில் இது 140 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

கஞ்சா இறக்குமதியின் மூலம் பல வெளிநாடுகள் பெரும் வருமானத்தை ஈட்டுவதாக தெரிவித்த டயானா கமகே, உள்நாட்டில் ஒரு பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்ட முடியும் எனவும் தெரிவித்தார்.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

40 ஆண்டுகளின் பின் ஈரானுக்குள் அமைதியாக நடக்கும் அதிகார மாற்றம்: மதகுருமாரை பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தும் இராணுவம்!

த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விரிவான அறிக்கையின்படி, ஈரானின் முடிவெடுக்கும்...

அம்பியூலன்ஸ் மெதுவாக சென்றதால் பொலிஸ்காரர் உயிரிழப்பா?: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்...

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்