எரிபொருள் சூத்திரம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்!

Date:

எரிபொருள் விலை சூத்திரம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் சப்ரி, இந்த கோரிக்கையை கவனத்தில் கொள்ளுமாறு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்தார்.

இலங்கை மத்திய வங்கியும் இந்த பிரேரணையை முன்வைத்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், விலை சூத்திரமொன்றை மீள அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

உலக எரிபொருளின் விலையை அடிப்படையாகக் கொண்டு ஏற்ற இறக்கமான எரிபொருள் விலைகளைக் கொண்டிருக்கும் முறைக்கு அரசாங்கம் திரும்ப வேண்டும் என்றும் அவர் கூறினார்.

எனவே, இந்த கோரிக்கையை நிதியமைச்சர் மற்றும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என அமைச்சர் சப்ரி வலியுறுத்தியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...

“வாக்குச்சாவடி என்பது சினிமா ஷூட்டிங் அல்ல” – நடிகை சிம்ரன் பகிர்வு

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தனது வாக்கைப் பதிவு செய்த நடிகை...

கண்ணிவெடி வைத்தால் ஈரான் படகுகளை சுட்டுத்தள்ளுவோம்: ட்ரம்ப்

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளைப் பதிக்கும் எந்தவொரு கப்பலையும் அமெரிக்கா அழிக்கும் என்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்