எதிர்வரும் 18 ஆம் திகதி கார்த்திகை தீபத் திருநாளில் நாவலர் கலாசார மண்டபத்தின் நுழைவாயிலில் நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது.
யாழ் மாநகர சபையின் உறுதுணையுடன் சைவ மகா சபையால் நிறுவப்பட்ட திருவுருவச் சிலை காலை 10 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.
நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறப்பு விழாவினை முன்னிட்டு நாவலர் கலாசார மண்டபத்தை புனரமைக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.
நாவலர் கலாசார மண்டபத்தின் பராமரிப்பை மாநகரசபையால் மேற்கொள்ள முடியாது, அதை மத்திய அரசிடமே கையளிக்க வேண்டுமென அரச தரப்பினர் கேட்டிருந்தனர். யாழ்ப்பாண சைவப் பிரமுகர்கள் என கூறிக்கொண்ட ஒரு குழுவும், மாகாண அதிகாரத்தை பிடுங்கி மத்தியிடம் வழங்க தீவிரமாக முயற்சித்தது. அவர்களிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நாவலர் மண்டபத்தை புதுப்பொலிவுடன் பராமரிக்க யாழ் மாநகரசபை நடவடிக்கையெடுத்துள்ளது.