மாகாண அதிகாரங்களை பிடுங்க முயன்ற யாழ்ப்பாண சைவப்பிரமுகர்களிற்கு பதிலடி கொடுக்கும் மாநகரசபை!

Date:

எதிர்வரும் 18 ஆம் திகதி கார்த்திகை தீபத் திருநாளில் நாவலர் கலாசார மண்டபத்தின் நுழைவாயிலில் நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது.

யாழ் மாநகர சபையின் உறுதுணையுடன் சைவ மகா சபையால் நிறுவப்பட்ட திருவுருவச் சிலை காலை 10 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.

நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறப்பு விழாவினை முன்னிட்டு நாவலர் கலாசார மண்டபத்தை புனரமைக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.

நாவலர் கலாசார மண்டபத்தின் பராமரிப்பை மாநகரசபையால் மேற்கொள்ள முடியாது, அதை மத்திய அரசிடமே கையளிக்க வேண்டுமென அரச தரப்பினர் கேட்டிருந்தனர். யாழ்ப்பாண சைவப் பிரமுகர்கள் என கூறிக்கொண்ட ஒரு குழுவும், மாகாண அதிகாரத்தை பிடுங்கி மத்தியிடம் வழங்க தீவிரமாக முயற்சித்தது. அவர்களிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நாவலர் மண்டபத்தை புதுப்பொலிவுடன் பராமரிக்க யாழ் மாநகரசபை நடவடிக்கையெடுத்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

40 ஆண்டுகளின் பின் ஈரானுக்குள் அமைதியாக நடக்கும் அதிகார மாற்றம்: மதகுருமாரை பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தும் இராணுவம்!

த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விரிவான அறிக்கையின்படி, ஈரானின் முடிவெடுக்கும்...

அம்பியூலன்ஸ் மெதுவாக சென்றதால் பொலிஸ்காரர் உயிரிழப்பா?: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்...

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்