பெண்களின் கையடக்கத் தொலைபேசிகளுக்கு ஆபாச படங்களை அனுப்பிய குற்றச்சாட்டில் ஒருவர் கஹவத்தை பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவின் கணினி குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் தனது உடல் உறுப்புகளை புகைப்படம் எடுத்து பெண்களின் கையடக்க தொலைபேசிகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருமணமான 40 வயதுடையவரே கைதாகியுள்ளார்.
சந்தேகநபரின் வீட்டில் இருந்து பல்வேறு நிறுவனங்களுக்குச் சொந்தமான 107 தொலைபேசி சிம்கள் கைப்பற்றப்பட்டதாகவும், பல்வேறு நபர்களின் தேசிய அடையாள அட்டைகளின் நகல்களை பெற்று, அவற்றைப் பயன்படுத்தி சிம்களைப் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.




