ஸ்பேஸ் எக்ஸில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 4 வீரர்கள் புறப்பட்டனர்!

Date:

ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) விண்கலம் வழி, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்வெளி வீரர்கள் நால்வர் புறப்பட்டுள்ளனர்.

இந்த விண்கலம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலிருந்து Falcon 9 ஏவுகணையின் ஊடாக விண்வெளிக்குள் பாய்ச்சப்பட்டது.

SpaceX-இன் “Crew-3” விண்வெளிப் பயணம் கடந்த மாதம் 31ஆம் திகதியிலிருந்து ஒத்திவைக்கப்பட்டது.

விண்வெளி வீரர்களில் ஒருவர் மருத்துவப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் விண்வெளிப் பயணம் மேற்கொள்வதற்கு வானிலை பொருத்தமாக இல்லை என்றும் கூறப்பட்டது.

விண்வெளிப் பயணம், அமெரிக்காவின் NASA விண்வெளி ஆய்வகம், SpaceX நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் ஓர் அங்கம்.

விண்வெளி வீரர்கள், பூமியின் சுற்றுப்பாதையில் அமைக்கப்பட்ட நிலையத்தில் அடுத்த 6 மாதங்களுக்கு ஆராய்ச்சி மேற்கொள்வர்.

அதன் மூலம், வருங்காலத்தில் மேற்கொள்ளப்படும் விண்வெளி ஆராய்ச்சிக்குத் தேவையான தகவல் சேகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

மாநகர சபை செயற்பாட்டுக்கு ஆணையாளர் முட்டுகட்டை! ஆளும் மற்றும் எதிர்தரப்பு உறுப்பினர்கள் போராட்டம்

யாழ் மாநகரின் ஆணையாளர் மற்றும் அதிகாரிகளின் இடையூறுகளுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும்...

மாமாங்கேஸ்வரர் ஆலய “தேர்” திருவிழா விண்ணைப் பிளந்த பல்லாயிரக்கணக்கானபக்தர்களின் அரோகரா கோஷம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலமான மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின்...

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானத்துக்கு வரவேண்டும்! – இம்ரான் எம்.பி

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்