மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், ஒமந்தை கிராம அலுவலர் ஆகியோருக்கு கோவிட் தொற்று உறுதி!

Date:

மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் ஒமந்தை கிராம அலுவலர் ஒருவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினரது உடல் நிலையில் ஏற்பட்ட மாற்றத்தையடுத்து இன்று (11) வவுனியாவில் துரித அன்டிஜன் பரிசோதனை முன்னெடுத்திருந்தனர். இதன்போது மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்கும், அவரது குடும்பத்தினர் இருவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், வவுனியா, ஓமந்தைப் பகுதி கிராம அலுவலர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களையும் தனிமைப்படுத்த சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்காவின் பி-52 குண்டுவீச்சு விமானம் விபத்து: 8 பேர் பலியாகியிருக்கலாமென அச்சம்!

கலிபோர்னியாவில் திங்களன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு பி-52 ரக குண்டுவீச்சு...

சூரியவன்ஷிக்கு முன்னாள் இலங்கை கப்டன் வழங்கிய ஆலோசனை

முன்னாள் இலங்கை கப்டன் அனுர தென்னக்கோன், இந்திய இளம் நட்சத்திர வீரர்...

தென்மாகாண முன்னாள் முதல்வரின் தனிப்பட்ட செயலாளர் ஊழல் குற்றச்சாட்டில் கைது!

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவின் தனிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்