26.7 C
Jaffna
March 11, 2025
Pagetamil
இந்தியா

வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை, முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார்.
.
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததையடுத்து, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றிரவு சென்னை மற்றும் அதனை சுற்றிய புறநகர் பகுதிகளில், இடி மின்னலுடன் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது. இடைவெளியின்றி தற்போது வரையிலும் பெய்து வருவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால் தாழ்வான பகுதிகளில் குளம் போல் வெள்ளம் தேங்கியுள்ளது. சாலைகளே கண்ணுக்கு தெரியாதவாறு முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்பதால், வாகனங்கள் தண்ணீரில் மிதக்கின்றன.

பல்வேறு இடங்களில் கழிவுநீருடன் மழைநீரும் கலந்து தெருக்களில் மட்டுமல்லாது வீடுகளுக்குள்ளும் புகுந்ததால் சுகாதார சீர்கேடான நிலை காணப்படுகிறது.

இந்தநிலையில் வெள்ளம் பாதிப்பு உள்ள பகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். எக்மோர், டவுடன், கே.என். கார்டன், படலம், நியூ பாலஸ் ரோடு, ஒட்டேரி இடது பாலம், கான்பூர் நெடுஞ்சாலை, பாடி பாலம், சத்ய நாகர் உறைவிடம் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்ற ஸ்டாலின், மழைநீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் பாடி பாலம் வழியாக பாபா நகர், ஜிகேம் காலனி, ஜவஹர் நகர் வழியாக வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த ஸ்டாலின் பேப்பர் மில் சாலை பகுதியில் வெள்ளம் பாதித்த இடங்களை பார்வையிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தங்கம் கடத்திய நடிகை கைது!

Pagetamil

கவிஞர் நந்தலாலா காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Pagetamil

விஜயலட்சுமியுடன் சமரசம் செய்ய அவகாசம்: சீமான் மீதான பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Pagetamil

தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தொடர் உணவுத்தவிர்ப்பு போராட்டம்

Pagetamil

மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 9ம் வகுப்பு மாணவன் பலி

Pagetamil

Leave a Comment