அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்படும் வீட்டுத் திட்டத்தை கட்டித் தருவதாக வாக்குறுதி அளித்து நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சிசிடிக்கு கிடைத்த இரண்டு முறைப்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் பின்னர் சந்தேகநபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
ராகம பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய நபர் இன்று வெலிசர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்




