25.4 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

கிளிநொச்சியில் விவசாயிகள் போராட்டம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள விவசாயச் செய்கைக்கு தேவையான உரத்தை பெற்றுத் தருமாறு கோரி இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதுடன் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணிக்கு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை முன்பாக இருந்து மாவட்ட செயலகம் வரை சென்ற பேரணி மாவட்ட செயலகத்தில் நிறைவடைந்து இலங்கை ஜனாதிபதி, விவசாய அமைச்சர், மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்டவர்களுக்கான மகஜர் கையளிக்கப்பட்டது.

மகஜர்களை கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் பெற்றுக் கொண்டுள்ளார்.

குறித்த போராட்டத்தின்போது சேதனப் பசளை உரிய தரத்தில் கிடைப்பதில்லை, மாவட்டத்தில் தேவையான 40 விதமான நிலம் பயிர் செய்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளுக்கு தேவையான உரத்தை பெற்று தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

வித்தியா கொலை வழக்கு – குற்றவாளிகளின் மேன்முறையீட்டை விசாரிக்க உள்ள உயர் நீதிமன்றம்

east tamil

யாழ் மாநகரசபையால் பாதிப்படையும் பழக்கடை வியாபாரிகள்

east tamil

கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதில் ஊழலா? – சஜித்

east tamil

Leave a Comment