நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபத்தினால் விற்கப்படும் எரிபொருளின் விலையை அதிகரிக்காமல் இருக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
கடந்த மூன்று மாதங்களாக எரிபொருள் பற்றாக்குறை இருப்பதாக எதிர்க்கட்சிகளும் தொழிற்சங்கங்களும் வதந்தி பரப்பி பொதுமக்களை ஏமாற்றி வருகின்றன என்று அமைச்சர் கூறினார்.
இதுபோன்ற வதந்திகளைத் தொடர்ந்து, எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு மக்கள் திரண்டு வரும்போது, தவிர்க்க முடியாமல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு பற்றாக்குறையை உருவாக்குகிறது.
பொதுமக்களுக்கு சுமை இல்லை என்பதை உறுதி செய்ய சலுகைகளை வழங்குமாறு நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கம்மன்பில கூறினார்.
எதிர்காலத்தில் எரிபொருள் விலையை அதிகரிக்கும் எண்ணம் தற்போது இல்லை என்று கூறிய அவர், அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் தான் அறிக்கை வெளியிடுவேன் என்று கூறினார்.