மாணவர்களுக்கு சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க பயிற்சி அளிக்குமாறு பெற்றோர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிப்பதன் மூலம் மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று சிறப்பு குடும்ப மருத்துவ ஆலோசகர் வைத்தியர் மல்கந்தி கல்ஹேன கூறினார்.
பாடசாலைகளை மீண்டும் திறப்பதன் மூலம், மாணவர்கள் வைரஸால் பாதிக்கப்படலாம், அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சமூகத்தில் மற்றவர்களுக்கு வைரஸை பரப்பலாம்.
எனவே அபாயங்களைக் கண்டறிவது மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட தனிமைப்படுத்தல் விதிமுறைகளைப் பின்பற்றுவது முக்கியம் என்று அவர் கூறினார்.
மாணவர்கள் எப்போதும் முகக்கவசம் அணிய வேண்டும், கைகளை தவறாமல் கழுவ வேண்டும், வாய் மற்றும் முகத்தை தொடுவதை தவிர்க்கவும், குழுக்களாக உணவு உட்கொள்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தினார்.
நீரிழப்பு பல சிக்கல்களை ஏற்படுத்துவதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு போதுமான திரவங்களை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.



