அயர்லாந்தை வீழ்த்தி சூப்பர் 12 சுற்றை உறுதி செய்தது இலங்கை!

Date:

2021 ஐசிசி ரி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றிற்கு இலங்கை தகுதி பெற்றது. நேற்று நடந்த தகுதிச்சுற்று ஆட்டமொன்றில் அயர்லாந்தை 70 ஓட்டங்களால் இலங்கை வீழ்த்தியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

இலங்கை அணி சார்பில் வனிந்து ஹசரங்க 71 ஓட்டங்களையும், பதும் நிசங்க 61 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

இலங்கை ஒரு கட்டத்தில் 8 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டை இழந்திருந்த போது, நிசங்க, ஹசரங்க ஜோடி அணியை தூக்கி நிறுத்தியது.

அணித்தலைவர் தசுன் சானக்க ஆட்டமிழக்காது 21 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் ஜோசுவா லிட்டில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். அதன்படி, 172 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 18.3 ஓவர்கள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 101 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் அதிகபட்சமாக ஆண்ட்ரூ பல்பர்னி41 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் மஹீஸ் தீக்சன  3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இந்த வெற்றியை தொடர்ந்து சூப்பர் 12 சுற்றுக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

போக்குவரத்து விதிகளை மீறி ரிக்ரொக் வீடியோ: 3 யுவதிகள் கைது!

புத்தல-அம்பகொலவெவ வீதியில் தலைக்கவசம் அணியாமல், போக்குவரத்து விதிகளை மீறி மோட்டார் சைக்கிள்...

2 அணிகளாகப் பிரிந்தது அதிமுக: தற்காலிக பேரவைத் தலைவரிடம் பழனிசாமி, வேலுமணி தரப்பினர் தனித்தனியே கடிதம்

சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் யார் என்பதில் பொதுச் செயலாளர் பழனிசாமி...

பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்