மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினரின் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த நிலையில் ஒருவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி சம்பவமானது இன்று பிற்பகல் ஆறு மணியளவில் களுவாஞ்சிகுடி மக்கள் வங்கி வீதியில் இடம் பெற்றுள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது.
களுவாஞ்சிக்குடியில் இண்டு காணி உரிமையாளருக்கிடையில் ஒழுங்கை சம்பந்தமான பிரச்சினை இடம் பெற்ற நிலையில் குறித்த பிரதேச சபை உறுப்பினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.
பிரச்சனையை கேட்டுவிட்டு, தனது தீர்ப்பை அந்த பிரதேசசபை உறுப்பினர் வழங்கியுள்ளார். அதை ஏற்க மறுத்த போது, பிரச்சனையுடன் தொடர்புடைய மறுதரப்பினருன் இணைந்து தன்னை தாக்கியதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



