UPDATE: அத்துமீறி நுழைந்த 23 இந்திய மீனவர்கள் கைது (PHOTOS)

Date:

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த 23 இந்திய மீனவர்கள், கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

வெற்றிலைக்கேணிக்கும் பருத்தித்துறைக்கும் இடையிலான கடற்பரப்பில்  இரண்டு மீன்பிடி படகுகளில் அத்துமீறி நுழைந்த 23 மீணவர்களே கைது செய்யப்பட்டனர்.

வடக்கு கடற்படை கட்டளைபீடத்தின் காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு சொந்தமான கப்பல்கள் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

23 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது இரண்டு படகுகள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு, மின்பிடி திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

தற்போது அவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து தம்மை தாக்குவதுடன், தமது வலைகளையும் சேதப்படுத்துவதாக கூறி, வடக்கு கரையோர கிராமங்களில் தொடர் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடற்படையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

40 ஆண்டுகளின் பின் ஈரானுக்குள் அமைதியாக நடக்கும் அதிகார மாற்றம்: மதகுருமாரை பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தும் இராணுவம்!

த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விரிவான அறிக்கையின்படி, ஈரானின் முடிவெடுக்கும்...

அம்பியூலன்ஸ் மெதுவாக சென்றதால் பொலிஸ்காரர் உயிரிழப்பா?: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்...

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்