UPDATE: அத்துமீறி நுழைந்த 23 இந்திய மீனவர்கள் கைது (PHOTOS)

Date:

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த 23 இந்திய மீனவர்கள், கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

வெற்றிலைக்கேணிக்கும் பருத்தித்துறைக்கும் இடையிலான கடற்பரப்பில்  இரண்டு மீன்பிடி படகுகளில் அத்துமீறி நுழைந்த 23 மீணவர்களே கைது செய்யப்பட்டனர்.

வடக்கு கடற்படை கட்டளைபீடத்தின் காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு சொந்தமான கப்பல்கள் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

23 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது இரண்டு படகுகள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு, மின்பிடி திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

தற்போது அவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து தம்மை தாக்குவதுடன், தமது வலைகளையும் சேதப்படுத்துவதாக கூறி, வடக்கு கரையோர கிராமங்களில் தொடர் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடற்படையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

 

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைக் கைது செய்வதற்கான பிடியாணை...

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்