மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடை விரைவில் நீக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஓக்டோபர் 21 வரை தற்போதைய மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடை அமலில் இருக்கும். அதை நீட்டிப்பது குறித்து கோவிட் செயலணி கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.
எனினும், வெளிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நேற்று (புதன்கிழமை) வெளிநாட்டு இராஜதந்திரிகளுடம் நடைபெற்ற கூட்டத்தில் , மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடையை நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எப்போது தடை நீக்கப்படும் என்று குறிப்பிடவில்லை, ஆனால் நாட்டைத் திறக்க நடவடிக்கை இருப்பதாக கூறினார்.
சுற்றுலாப் பயணிகளுக்காகவும் இலங்கை தனது எல்லைகளைத் திறக்கும் என்று அவர் கூறினார்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1