ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தங்கள் கோரிக்கைகள் வெற்றி பெறும் வரை சம்பள முரண்பாடுகள் குறித்த போராட்டம் நிறுத்தப்படாது என்று கூறுகின்றன.
நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான கலந்துரையாடலின் போது பேசப்பட்ட விஷயங்கள் தொடர்பாக சமூக ஊடகங்களில் தவறான பிரச்சாரம் பரப்பப்படுவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைமைச் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்தார்.
இன்று காலை தொழிற்சங்கங்களுடனான கலந்துரையாடலின் போது, மூன்று, நான்கு கட்டங்களாக சம்பள அதிகரிப்பு வழங்கும் ஆரம்ப முன்மொழிவுக்கு மாறாக இரண்டு கட்டங்களாக அதிகரிப்பை வழங்க அரசாங்கம் ஒப்புக் கொண்டதன் மூலம் தொழிற்சங்க நடவடிக்கை முன்னேற்றம் அடைந்துள்ளது புரிகிறது. எமது் மூலோபாயம் மாற வேண்டுமா என்று நீண்ட நேரம் விவாதித்தோம்.
தொழிற்சங்கங்கள் நம்பிக்கையுடன் ஒன்றிணைந்து முன்னேறினால், ஒரே கட்டத்தில் அதிகரிப்புகளைப் பெறுவதற்கான கோரிக்கைகளை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை தொழிற்சங்க பிரதிநிதிகள் வெளிப்படுத்தினர்.
நிதி இல்லை என்ற காரணத்தை தொழிற்சங்கங்கள் ஏற்காது என்றார்.
மாகாண அபிவிருத்தி குழுவின் தலைவருக்கு ரூ .100 மில்லியன், துணைத் தலைவருக்கு ரூ .20 மில்லியன், மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களிற்கு ரூ .20 மில்லியன் அபிவிருத்தித் திட்டங்கள் என்ற போர்வையில் அரசியல் திட்டங்களுக்கு மில்லியன் கணக்கில் நிதி செலவழிக்கப்படும் போது நிதி பற்றாக்குறை பற்றிய கூற்றுக்களை அவர் கேள்விக்கு உட்படுத்தினார்.
இந்த திட்டங்கள் அனைத்தும் அடுத்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் கவனம் செலுத்துவதாக அவர் கூறினார்.



