முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் இல்லாமல் மத்திய வங்கி பிணை முறி மோசடி வழக்கை தொடருமாறு சட்டமா அதிபர் கொழும்பு உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மகேந்திரன் சிங்கப்பூரில் இருப்பதாக நம்பப்படுகிறது. அவரை இலங்கையில் விசாரணைக்காக நாடு கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றியளிக்கவில்லை.
மகேந்திரனை ஒப்படைப்பது குறித்து இலங்கை மற்றும் சிங்கப்பூர் விவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி கடந்த டிசம்பர் மாதம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கை சட்டமா அதிபரின் கோரிக்கை தொடர்பாக, சிங்கப்பூர் சட்டமா அதிபர் சில விளக்கங்களை கோரியுள்ளார்.



