பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்களில் வெளியான தகவல்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, திருக்குமரன் நடேசனை இன்று விசாரணைக்கு அழைத்துள்ளது.
பண்டோரா பேப்பர்ஸ் மூலம் வெளிவந்த தகவல்கள் குறித்து ஒரு மாதத்திற்குள் விரைவான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ராஜபக்ஷ புதன்கிழமை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




