வலி கிழக்கு பிரதேசசபை உறுப்பினர் உள்ளிட்ட 3 பேருக்கும் விளக்கமறியல்!

Date:

கைது செய்யப்பட்ட வலிகாமம் கிழக்கு பிரதேசசபையின் உறுப்பினர் உள்ளிட்ட 3 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஊரெழு, பொக்கணை பகுதியில் நேற்று இரவு கடமையில் ஈடுபட்டிருந்த சுன்னாகம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் தலைக்கவசம், முகக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் செலுத்தி வந்த வலிகாமம் கிழக்கு பிரதேசசபையின் உறுப்பினர் சிவலிங்கம் நிமலை தடுத்து நிறுத்தினர்.

இதன்போது, அங்கு குவிந்த பிரதேசவாசிகள் பொலிசாருடன் தர்க்கப்பட்டனர். அங்கு பரபரப்பான நிலைமையேற்பட்டதை தொடர்ந்து பொலிசார் வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதையடுத்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. வலி கிழக்கு பிரதேசசபை உறுப்பினருக்கு தண்டச்சீட்டு வழங்கப்பட்டது.

இன்று காலை வலிகாமம் கிழக்கு பிரதேசசபை உறுப்பினர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இன்று மாலை அவர்களை கோப்பாய் பொலிசார் நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.

மூவரையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

40 ஆண்டுகளின் பின் ஈரானுக்குள் அமைதியாக நடக்கும் அதிகார மாற்றம்: மதகுருமாரை பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தும் இராணுவம்!

த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விரிவான அறிக்கையின்படி, ஈரானின் முடிவெடுக்கும்...

அம்பியூலன்ஸ் மெதுவாக சென்றதால் பொலிஸ்காரர் உயிரிழப்பா?: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்...

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்