அவுஸ்திரேலியா செல்வதற்கான விமானப் பயணச் சீட்டுகளின் தேவை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
சுமார் ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு அவுஸ்திரேலியா தனது எல்லைகளைத் திறந்து விடத் தயாராகி வருகிறது.
டிசம்பரில், சில விமானங்களுக்கான பயணச் சீட்டுகள் விற்று முடிந்து விட்டதாக Qantas நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக, அவுஸ்திரேலியர்களுக்கும், நிரந்தவாசிகளுக்கும் அனுமதி வழங்கப்படும்.
மாணவர்களும், சுற்றுப் பயணிகளும் அவுஸ்திரேலியா செல்ல அனுமதிப்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




