தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை நீக்கப்படும் என்றாலும், இரண்டு வாரங்களுக்கு புகையிரத சேவைகள் இயங்காது என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அடுத்த இரண்டு வாரங்களிற்கு மாகாணங்களுக்கு இடையேயான பேருந்துகளும் இயங்காது.
இருப்பினும், மாகாணங்களுக்குள் பேருந்து சேவைகள் வழக்கம் போல் நாளை அதிகாலை 4 மணிக்குப் பிறகு மீண்டும் தொடங்கும்.
சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த முடிவுகள் எட்டப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் அமுனுகம தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1