27.6 C
Jaffna
March 28, 2024
முக்கியச் செய்திகள்

மன்னார் பிரதேசசபையின் புதிய தவிசாளராக எம்.ஐ.எம். இஸ்ஸதீன் தெரிவு: தவிசாளர் நியமனத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு!

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். முஜாஹிர் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் என்ற வகையில் அப்பதவியில் பணிகள் மற்றும் கடமைகளை நிறைவேற்றும் போது குற்றங்கள் புரிந்துள்ளார் என்ற அடிப்படையில் கடந்த 14ஆம் திகதி (14) தொடக்கம் தனது மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவியையும் உறுப்பினர் பதவியையும் இழந்த நிலையில் மன்னார் பிரதேச சபை தவிசாளருக்கான தெரிவு இன்று புதன்கிழமை (29) காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது.

வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் டிரஞ்சன் தலைமையில் மன்னார் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற இத்தேர்தலில் 21 உறுப்பினர்களில் ஒருவர் சபையில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் 20 உறுப்பினர்கள் மத்தியில் இ தவிசாளருக்கான தேர்தல் இடம்பெற்றது.

இத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் 07 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் 06 உறுப்பினர்களும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த 02 உறுப்பினர்களும், ஈ.பி.டி.பி கட்சி சார்பில் 01 உறுப்பினரும், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் 01 உறுப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 02 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த 01 உறுப்பினரும் மொத்தம் 20 உறுப்பினர்கள் இத்தேர்தலில் வாக்களித்தனர்.

இத்தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர் எம்.ஐ.எம். இஸ்ஸதீன், தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஜே.ஈ. கொன்சல் குலாஸ், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் என். செபமாலை பீரீஸ் ஆகியோர் தவிசாளருக்கான போட்டியில் போட்டியிட்டனர்.

இதில் முதல் சுற்றில் நடைபெற்ற திறந்த போட்டியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர் எம்.ஐ.எம். இஸ்ஸதீன் 09 வாக்குகளையும், தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஜே.ஈ. கொன்சன் குலாஸ் 08 வாக்குகளையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சார்ந்த என்.செபமாலை பீரீஸ் 03 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

இதைத் தொடர்ந்து இரண்டாம் சுற்று போட்டி இடம்பெற்றது. இவ் போட்டியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர் எம்.ஐ.எம். இஸ்ஸதீன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேசாலை உறுப்பினர் ஜே.ஈ. கொன்சன் குலாஸ் ஆகியோருக்கு இடையே நடைபெற்றது.

இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த 06 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சார்ந்த 01 உறுப்பினரும், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் 01 உறுப்பினரும், ஈ.பி.டி.பி சட்சி சார்பில் 01 உறுப்பினரும் வாக்களித்ததில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட எருக்கலம் பிட்டி உறுப்பினர் எம்.ஐ.எம். இஸ்ஸதீன் 09 வாக்குகளை பெற்றார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் 07 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 01 உறுப்பினரும் வாக்களித்ததில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட உறுப்பினர் ஜே.ஈ. கொன்சன் குலாஸ் 08 வாக்குகளை பெற்றார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினரும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சேர்ந்த 02 உறுப்பினர்களும் இரண்டாம் சுற்று வாக்களிப்பில் நடுநிலை வகித்தனர்.

இதைத் தொடர்ந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட உறுப்பினர் எம்.ஐ.எம். இஸ்ஸதீன் 09 வாக்குகள் பெற்று ஒரு மேதிக வாக்கினால் மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் நியமனத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு!

மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளரை நியமித்து, வர்த்தமானி வெளியிடுவதை தடுத்து, மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால், வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு இன்று புதன் கிழமை (29) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநரால், மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவி மற்றும் அவரது உறுப்புரிமை நீக்கப்பட்டு, கடந்த 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்ற தாக்குமாறு கோரி, தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிரினால், நேற்று செவ்வாய்க்கிழமை (28), கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த மனுவை இன்று (29) ஆராய்ந்த சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக்க கனேபொல ஆகிய நீதிபதிகள் குழாம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

குறித்த மனு தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையும் வரை, இந்த உத்தரவு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முஜாஹிர் சார்பில், சட்டத்தரணிகளான என்.எம்.ஷஹீட், ருஷ்தி ஹபீப் உள்ளிட்ட குழாமினர் வாதங்களை முன்வைத்திருந்தனர்.

மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு இன்று (29) இடம் பெற்ற நிலையிலேயே, இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

Leave a Comment