இன்று (26) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகளுக்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் சில இடங்களில் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
ஏ35 வீதியில் தேராவில், உடையார்கட்டு, வள்ளிபுனம், தேவிபுரம், கைவேலி, புதுக்குடியிருப்பு நகர்பகுதி, ஊடாக மந்துவில், ஆனந்தரபும், இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் பகுதிகளில் இன்று காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணி வரையில் மின்சாரம் தடைப்படும்.



