யோகி பாபுவின் ஜோடியானார் ஓவியா!

Date:

அன்கா மீடியா நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் யோகி பாபு ஜோடியாக ஓவியா நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்துடன் இணையத்தில் படு ஆக்டிவாக செயல்பட்டு வருபவர் நடிகை ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் திரைத்துறையில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட இவர் சரியான வாய்ப்புகள் அமையாமல் இருந்தது. இந்நிலையில் ஓவியாவின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

ஒரு பக்கம் காமெடியனாகவும் மறு பக்கம் ஹீரோவாகவும் கைவசம் பல படங்களுடன் பிசியான நடிகராக திகழ்பவர் யோகி பாபு. கடைசியாக யோகி பாபு நடிப்பில் வெளியான மண்டேலா படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, அவரின் நடிப்பும் பலரால் பாராட்டப்பட்டது. மேலும், யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள பல படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

இந்நிலையில், நடிகர் யோகிபாபு அடுத்ததாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை அன்கா மீடியா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்தப்படத்தில் தான் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிகை ஓவியா நடிக்க உள்ளார். இப்படத்தின் பூஜை வருகிற செப்டம்பர் 24ஆம் திகதி நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகை ஓவியா, யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/OviyaaSweetz/status/1440341233054801925?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1440341233054801925%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Ftamil-cinema%2Fmovie-news%2Fall-is-well-between-prabhas-and-pooja-hegde-radhe-shyam-team-clarifies%2Farticleshow%2F86427783.cms

இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் வடிவேலு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட ‘பேய் மாமா’ படத்தில் அவருக்கு பதிலாக யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப்படம் இந்த வாரம் வெளியாக உள்ளது. இந்நிலையில் படக்குழுவினர் வெளியிட்டுள்ள இந்தப்படத்தின் போஸ்டர் பாலிவுட்டில் விக்கி கவுஷல் நடித்த ‘பூட் போலீஸ்’ பட போஸ்டரின் காப்பி என சர்ச்சைகள் கிளம்பியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சவுதி அராம்கோ ஹெலிகாப்டர் விபத்து: 14 உயிர்களை காவுகொண்ட பேரதிர்ச்சி

சவுதி அரேபியாவில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக...

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரும் யோசனையை அரசு பரிசீலனை

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான...

முதியோர் கொடுப்பனவை மீள வழங்க சிறப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத காரணத்தால் மாதாந்திர முதியோர் கொடுப்பனவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்