குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

Date:

மட்டக்களப்பு பேத்தாழை ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக் கிழமை (19) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.கும்புறுமூலை வெம்பு வாழைச்சேனைசேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சின்னான் சித்திரவேலாயுதம் (62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலத்தினை தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர். பின்னர் ‘கல்குடா டைவஸ்;’ அமைப்பின் சுழியோடிகள் வரவழைக்கப்பட்டு சடலம் மீட்கப்பட்டது.சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு உடற் கூற்றாய்விற்காக மட்டக்களப்பு போதானா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அவருடன் குளிக்கச் சென்ற இரண்டு நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

7 நடிகைகள், 9 அரசியல்வாதிகள், 13 சிறை உத்தியோகத்தர்களின் தரவுகள்: கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் வெளிப்பட்ட தகவல்கள்!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில்...

சிரியா மீதான கடைசித்தடையையும் நீக்கியது அமெரிக்கா

திங்களன்று, அமெரிக்கா தனது பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் (SST) பட்டியலில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்