29.8 C
Jaffna
March 29, 2024
உலகம்

வான் தாக்குதலில் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா மன்னிப்பு கோரியது!

காபூலில் தவறுதலாக நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

காபூலில் கடந்த மாதம் தற்கொலைப்படை தீவிரவாதியைக் குறிவைத்து அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானம் (ட்ரோன்) தாக்குதலில் பொதுமக்கள்10 பேர் பலியானார்கள். இந்த நிலையில் இந்த ட்ரோன் தாக்குதலுக்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க ராணுவம் தரப்பில், “ எங்கள் விசாரணை முடிவில், காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ட்ரோன்தாக்குதல் மிகத் தவறான ஒன்று என்று தெரிய வந்துள்ளது. இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக காபூல் விமான நிலையத்தில் உயிரிழப்பு ஏற்படுவதற்கு அமெரிக்காவின் தாக்குதலே காரணம். இந்தத் தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் எந்த முன் அறிவிப்பையும் அமெரிக்கா எங்களிடம் முன்பே தெரிவிக்கவில்லை. இதனை அமெரிக்கா தெரிவித்திருக்க வேண்டும் என தலிபான்கள் குற்றம் சுமத்தினர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விபத்து: நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இருட்டு அறை… போதைப்பொருள்… சொர்க்க பிரச்சாரம்: ஐஸ் தலைவரின் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த இளம் பெண்களின் தகவல்கள்!

Pagetamil

Leave a Comment