காபூலில் தவறுதலாக நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
காபூலில் கடந்த மாதம் தற்கொலைப்படை தீவிரவாதியைக் குறிவைத்து அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானம் (ட்ரோன்) தாக்குதலில் பொதுமக்கள்10 பேர் பலியானார்கள். இந்த நிலையில் இந்த ட்ரோன் தாக்குதலுக்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க ராணுவம் தரப்பில், “ எங்கள் விசாரணை முடிவில், காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ட்ரோன்தாக்குதல் மிகத் தவறான ஒன்று என்று தெரிய வந்துள்ளது. இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக காபூல் விமான நிலையத்தில் உயிரிழப்பு ஏற்படுவதற்கு அமெரிக்காவின் தாக்குதலே காரணம். இந்தத் தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் எந்த முன் அறிவிப்பையும் அமெரிக்கா எங்களிடம் முன்பே தெரிவிக்கவில்லை. இதனை அமெரிக்கா தெரிவித்திருக்க வேண்டும் என தலிபான்கள் குற்றம் சுமத்தினர்.