இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை மதுபோதையில் அனுராதபுரம், வெலிக்கடை சிறைச்சாலைகளிற்குள் நுழைந்த அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக, பொதுஜன பெரமுனவின் மத்திய செயற்குழுவில் ஆராயப்பட்டு நடவடிக்கையெடுக்கப்படும் என கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இத்தாலிக்கு பயணித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச விரைவில் நாடு திரும்புவார் என்றும், அவர் நாடு திரும்பியதும் மத்திய செயற்குழு கூடுமென்றும் தெரிவித்தார்.



