பாடசாலை மாணவர்களிற்கு தடுப்பூசி வழங்கும் காலப்பகுதி இறுதி செய்யப்படாத போதிலும், பாடசாலை செல்லும் பிள்ளைகளை தடுப்பூசி பெற தயார் செய்யுமாறு சுகாதார அமைச்சகம் பெற்றோருக்கு அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்படும் வரை பாடசாலை மாணவர்களிற்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்காது என்றும் தெரிவித்தார்.
தடுப்பூசிகள் செலுத்தப்படும் திகதிகள் மற்றும் இடங்கள் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.



