கல்கிஸ்ஸையில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு சந்தேக நபரை குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்தார்.
பாலியல் நோக்கத்திற்காக பெண்கள் மற்றும் சிறுமிகளை விற்பனை செய்வதற்காக இயக்கப்பட்ட இணையதளத்தின் உரிமையாளர் என சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இரத்தினபுரி கலவானவில் வசிப்பவர்.
15 வயது சிறுமி தொடர்பான வழக்கில் இதுவரை 46 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகள் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையினரால் மேற்கொள்ளப்படுகின்றன.



