தென்மராட்சியில் நேற்றிரவு விபத்து: இளைஞன் பலி!

Date:

தென்மராட்சி, மீசாலை பகுதியில் நேற்று (14) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று இரவு 9.30 மணியளவில், மீசாலை, புத்தூர் சந்தி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியது. இதில்  24 வயதான ராஜன் சிந்துஜன் (24) என்ற, மீசாலையை சேர்ந்த இளைஞன் உயிரிழந்தார்.

அவரது சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு நண்பர்கள், உறவினர்கள் என பெருமளவானவர்கள் திரண்டதை தொடர்ந்து பதற்றமான நிலைமையேற்பட்டது. பின்னர் பொலிசார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்படுத்தப்பட்டு, சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்