கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று வரை 72,000 க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் 72,113 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 637 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். 1
இந்த காலகட்டத்தில் 8 வாகனங்கள் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
மேல் மாகாணத்திற்குள் நுழையும் 790 வாகனங்களும், மாகாணத்திலிருந்து வெளியேறும் 596 வாகனங்களும் நேற்று சோதனை செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1