31.9 C
Jaffna
April 28, 2024
இலங்கை

வவுனியாவில் 104 வயது மூதாட்டி உட்பட 11 பேர் கோவிட் தொற்றால் மரணம்

வவுனியாவில் கோவிட் தொற்று காரணமாக 104 வயது மூதாட்டி உட்பட 11 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கோவிட் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த, தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் இருந்தோர் என 104 வயது மூதாட்டி உட்பட 11 பேர் கோவிட் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், மரணித்த 11 பேரினதும் உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, வவுனியா, மூனாமடு கிராமத்தைச் சேர்ந்த குறித்த 104 வயது கதிரவேல் அமிர்தம் என்ற மூதாட்டியே மரணமடைந்தவராவார். வவுனியாவில் அதி கூடிய வயதில் மரணித்த முதலாவது மூதாட்டியாக இவரே கணிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளிநொச்சியில் 4Kg தங்கக்கட்டியுடன் கைது செய்யப்பட்ட பெண்கள்!

Pagetamil

அச்சுவேலியில் வீடு புகுந்து தாக்குதல்

Pagetamil

முகமாலையில் மனித எச்சங்கள் மீட்பு!

Pagetamil

தென்கொரியாவில் தஞ்சமா?: மைத்திரி மறுப்பு!

Pagetamil

யாழில் போதை ஊசி ஏற்றப்பட்டு சீரழிக்கப்பட்ட பெண்: சூத்திரதாரியான சகோதரனுக்கு விளக்கமறியல்!

Pagetamil

Leave a Comment