தென்கொரியாவுக்கோ அல்லது உலகின் வேறு எந்த நாடுகளுக்கோ சென்று வாழ வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி தென்கொரியாவில் வாழப் போகிறார் என்ற பொய்யான தகவல்கள் பல்வேறு ஊடகங்கள் மூலம் இந்த நாட்களில் பரவலாகப் பரப்பப்படுவதையடுத்து, இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.



