மறுவாழ்வு மையத்தில் சேர்ந்தார் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ்

Date:

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்ட பாப் பாடகியும் நடிகையுமான பிரிட்னி ஸ்பியர்ஸ் தாமாக முன்வந்து மறுவாழ்வு மையம் ஒன்றில் சேர்ந்துள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள வெஞ்சுரா கவுண்டியில் அவர் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக மார்ச் 4 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மறுநாள் அதிகாலையில் விடுவிக்கப்பட்டார். அதிகாரப்பூர்வ குற்றச்சாட்டுகள் இறுதி செய்யப்படாத நிலையில் மே 4ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரிட்னியின் மேலாளர் கேட் ஹட்சன் வெளியிட்ட அறிக்கையில், “இது துரதிர்ஷ்டவசமான மற்றும் மன்னிக்க முடியாத சம்பவம். பிரிட்னி, சட்டத்துக்கு முழுமையாகக் கட்டுப்படுவார். அவரது வாழ்க்கையில் நீண்டகாலமாகத் தேவைப்படும் ஒரு மாற்றத்துக்கு இதுவே தொடக்கமாக அமையும் என்று நம்புகிறோம்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் மதுபோதையால் பாதிக்கப்பட்டுள்ள அவர், தாமாக முன்வந்து ஒரு மறுவாழ்வு மையத்தில் சேர்ந்துள்ளார். அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கொடுத்த ஊக்கத்தின் காரணமாக, அவர் குணமடைவதற்காக இம்முடிவை எடுத்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...

ஈரான் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் கைவிட்டன: டிரம்ப்

ஈரானுக்கு எதிரான தனது போருக்கு ஆதரவளிக்காத நேட்டோ கூட்டணியின் உறுப்பினர்களால் தான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்