பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அரச சார்பற்ற நிறுவன ஊழியர்கள், மண்ணில் புதைக்கப்பட்டிருந்த பல மனித எலும்புக்கூடுகளுடன் சீருடை ஒன்றை கண்டெடுத்துள்ளனர்.
இதுபற்றி அவர்கள் பளை போலீசில் புகார் அளித்ததையடுத்து, போலீசார் விசாரணை நடத்தினர்.
கிளிநொச்சி நீதவான் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டதுடன் குறிப்பிட்ட இடத்தில் மேலும் அகழ்வு பணிகளை திங்கட்கிழமை (29) மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.



