மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
மாவனெல்லையில் பல பௌத்த சிலைகளை அழித்தது தொடர்பான சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுடன் உறவு வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் ஆளுநருக்கு எதிராக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆசாத் சாலியின் சார்பில் சட்டத்தரணி மைத்திரி குணரத்னவால் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது.
எனினும் கொழும்பு பிரதான நீதவான் புத்திக ராகல பிணைக்கான கோரிக்கையை நிராகரித்தார்.




