வடக்கில் மேலுமொரு முக்கிய பதவிக்கு சிங்கள மொழி பேசுபவர் நியமனம்!

Date:

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளர் (பொறியியல் பிரிவு) பதவிக்கு வடமாகாணத்தில் இருவருக்கு தகுதியுள்ள நிலையில் அநுராதபுரத்தைச் சேர்ந்த சிங்கள மொழி பேசுபவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளர் (பொறியியல்) பதவி வெற்றிடமாக இருந்தது.

எனினும் அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கான தகுதி கிளிநொச்சி மற்றும் கோண்டாவில் சாலையில் கடமை புரியும் பொறியியலாளர்களிற்கு உள்ளநிலையில் திருகோணமலையில் கடமையாற்றிய சிங்கள மொழி பேசுபவர் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தனது கடமைகளை கடந்தவாரம் பொறுப்பேற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நியமனம் பொதுஜன பெரமுன தொழிற்சங்கத்தின் தலையீட்டுடன் நிகழ்ந்ததாக, வடமாகாண இ.போ.ச தொழிற்சங்கங்கள் பல குற்றம்சாட்டியுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

நேபாளை உலுக்கிய பேரழிவு: 162 பேர் பலி; 400க்கும் மேற்பட்டோர் மாயம்

நேபாளில் பேரழிவு: 162 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் மாயம் நேபாளத்தின் வடக்குப் பகுதியில்,...

கல்முனையில் சிறப்பாக நடைபெற்ற மீலாத் ஊர்வலம் – பொலிஸார் ஒத்துழைப்பு

உத்தம நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, சுன்னத்வல்...

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டத்தில் மரணிக்கவும் தயார்-தம்பிராசா செல்வராணி

எமது உறவுகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நிதி உதவி தேவை தான்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்